Thursday, June 30, 2016

Thirukkural – Facts

திருக்குறள் - (Thirukkural) – Known and Unknown Facts

திருக்குறள் = திரு + குறள். குறள் – இரண்டடி வெண்பா. திரு - சிறப்பு அடைமொழி.
Thirukkural. Since it follows the grammar of 'Kural venpa', it has to be named 'Kural'. To add respect, the term 'Thiru' was added which stands for 'Respected'.
திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.
Thirukkural was written by Thiruvalluvar. Thirukkuṛal itself does not name its author or authors. The name Thiruvalluvar is first mentioned in the 10th century in a text called Thiruvalluvarmaalai(திருவள்ளுவமாலை)
The image of Thiruvalluvar that we know today was painted by Mr.K.R.Venugopal Sharma.
திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பால்களை உடையது.
The book covers three parts of life and after-life, split accordingly into three sections ('paal'). The first section on aram (the way or dharma), the second on porul (material or artha) and the third on inbam (joy or kama).
It is rightly called 'Ulagappothumarai' (உலகப்பொதுமறை), means 'Universal book of principles' as the principles are common for all irrespective of country, time, caste, religion, sex
திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133. அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்களாக் 1330 குறட்பாக்கள் உள்ளன.
திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது
The poetry starts with 'அ', the very first letter of Tamil language and ends in 'ன்', the last main letter (Meyyezhuthu).
திருக்குறளில் ஒரே பெயரில் அமைந்த 2 அதிகாரங்கள் : குறிப்பறிதல - (பொருட்பால் - அதிகாரம் 71) குறிப்பறிதல் - (காமத்துப்பால் - அதிகாரம் 110)
திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
Total no of words is 14,000.
ஒரே சொல் 6 முறை 1 குறட்பாக்களிலும், ஒரே சொல் 5 முறை 5 குறட்பாக்களிலும், ஒரே சொல் 4 முறை 22 குறட்பாக்களிலும், ஒறே சொல் 3 முறை 27 குறட்பாக்களிலும் இடம் பெற்றுள்ளன.
திருக்குறளில் தமிழ் என்ற சொல் இடம் பெறவில்லை.
The word தமிழ்(Tamil) is not used in thirukkural
1330 குறட்பாக்களில் எந்த இடத்திலும் கடவுள் என்ற சொல் இடம் பெறவில்லை.
The word கடவுள்(God) is not used in குறள்(couplets). However, the name of first chapter கடவுள் வாழ்த்து(Katavul Vaazhththu) contains the word கடவுள்(God)
திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
Total no of letters is 42,194.
திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
Out of 247 tamil alphabets, 37 alphabets were never used.
திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெ எழுத்து-னி
The alphabet featuring the most times is ‘னி’ it features 1705 times.
திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங
The letters featuring only once are ளீ,ங .
ஒரு குறள்(1159) ஒரே எழுத்தில்(தீ) முடிந்துள்ளது.
திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
The only two flowers in the book are Anicham (Scarlet Pimpernel) and Kuvalai (Cup Flower)
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
Nezlhunji fruit is the only fruit featuring in the book
திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
The only seed featuring in the book is, Kundrimani (Crab’s eye tree)
திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
The two trees featuring in the boor are Palm and Bamboo.
திருக்குறளில் அனிச்ச மலர் 4 முறையும், யானை 8 முறையும், பாம்பு 3 முறையும் சுட்டப்பட்டுள்ளன.
அன்னம்,கூகை (ஆந்தை), கொக்கு, காக்கை, புள்(பறவை), மயில், ஆமை, கயல் மீன். மீன் (விண்மீன்), முதலை, நத்தம்(சங்கு), பாம்பு, நாகம், என்பிழாது(புழு) ஆகிய உயிரினங்கள் இடம் பெற்றுள்ளன.
112வது குறள் - பால், தேன், நீர் என்ற மூன்று நீர்மங்கள் இடம் பெற்றுள்ளன.
திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
Number 9 never used.
முதன் முதலில் 1812 ஆம் ஆண்டு ஓலைச்சுவடியிலிருந்து அச்சிடப்பட்டதே திருக்குறளின் முதற்பதிப்பாகும்.
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
Translated into 26 Languages.
திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்
Translated into English by 40 authors.
திருக்குறளின் சிறப்பை எடுத்துக் கூறும் நூல் திருவள்ளுவமாலை(தமிழின் முதல் திறனாய்வு நூல் )
திருக்குறளில் முப்பால்களிலும் 120-க்கும் மேற்பட்ட உவமைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.



Related topics:
திருக்குறள்(Thirukkural)   |   அறத்துப்பால்(Araththuppaal) – Virtue   |   பொருட்பால்(Porutpaal) – Wealth   |   காமத்துப்பால்(Kaamaththuppaal) – Love   |   அதிகாரம்(Adhigaram)

List of topics: Tamil

No comments:

Post a Comment